விரைவில் வருகிறது ஒளிந்திருக்கும் மனிதரை கண்டு பிடிக்கும் மொபைல் போன்.
ஆம், நாம் அன்றாடம் பாவிக்கும்
லாப் டொப் மற்றும் மொபைல் போனின் (WIFI )வை-பையின் அலைகள் மூலம்தான்
இதை உருவாக்கின்றார்கள்.
இந்த (WIFI ) வை-பையின் ரேடியோ அலைகள்
எமது உடலின் பிரதி பலிப்பை விட பத்தாயிரம்
முதல் ஒரு லட்சத்துக்கும் மேலான சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றது.
இது மனித உடலை மாத்திரம் இல்லாமல்
கடினமான இரும்பு, மரம் மற்றும் சீமேந்திலான
சுவர்களையும் ஊடறுத்து செல்லக் கூடிய சக்தி
வாய்ந்தவை.
இந்த (WIFI ) வை-பையின் அலையின் ஊடாக
இயக்கப்படுவதுதான் WI-VI என்னும் புதிய அப்ளிகேசன்.
இது இரண்டு ரேடியோ அலைகளை உருவாக்கும் ஒன்று செங்குத்தாக செல்லும் மற்றது நிலையாக செல்லும்.
இந்த அலைகள்
மீது ஏதும் நகரும் பொருட்கள் குறுக்கிட்டால்
அதன் ஒரு சமிக்ஞை(signal ) துண்டிக்கப்பட்டு நகரும் பொருள் உடனுக்குடன் எமது மொபைல் போனில்
உள்ள ஸ்க்ரீனில் ஸ்கேன் (Scan) ஆகி இருக்கும் அதன் நிழல்.
இதன் மூலம் எமது சுவருக்கு எதிர் முனையில் யாரும் ஒளிந்த்திருப்பதாக நாம் சந்தேகம்
கொண்டால் எமது மொபைல் போனின் WIVI அப்ளிகேசன் மூலம் கண்டறியலாம்.

No comments:
Post a Comment