யாரும் கல கொட அத்தே ஞான சார தேரோவை தொடக் கூடாது என்று அரசாங்கத்துக்கு நற்போதனை செய்கிறார்.
தேரர் மேலும் கூறுகையில் பேருவள, தர்கா ,மற்றும் அளுத்கம முஸ்லிம்களின் மத வழிபாடு செய்யும் இடம் என்ற பெயரில் அங்கு முஸ்லிம் பயங்கர வாதிகள் பயிற்சி எடுப்பதாக அப்பட்டமான பொய் ஒன்றை கூறினார் அத்துடன் முஸ்லிம் பயங்கர வாதிகளை கைது செய்யாமல் எமது சிங்கள வாலிபர்களை கைது செய்து 14 நாட்கள் சிறையில் அடைத்து அவர்களின் முகத்தில் மிளகாயித் தூள் வீசி அவர்களை துன்புறுத்துவதால் எதுவும் நாடக்காது என்று தெரிவித்தார் அவர் மேலும் கூறுகையில் கிழக்கில் கல்முனை,காத்தான்குடி,அக்கரைபற்றில் முஸ்லிம் பயங்கர வாதிகள் பயிற்சி எடுப்பதாகவும் கொழும்பு ஹட்டன் பகுதியில் ஹிந்துக்கள் பணத்திற்காக கிறிஸ்திய மதத்திற்கு மதம் மாறுவதாகவும் கவலை தெரிவித்தார்.
BBS CEO, விதனாஜ் தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர நடந்த கலவரத்தை வெளிப்படுத்தி எம்மை அரசியலில் குதிக்க வைக்க முனைகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment