செடவத்த கிராண்ட்பாஸ்ஸில் பல வருடங்களாக நூடில்ஸ் தயாரிக்கும் நிறுவனம் CCA அதிகாரிகளினால் சீல் வைத்து மூடப் பட்டுள்ளது.
CCA அதிகாரிகள் நிறுவனத்தை திடீர் சோதனை செய்ததில் அந்த நிறுவனம் சுத்தம் இல்லாமல் நூடில்ஸ் தயாரிப்பதாகவும், நூடில்ஸ் பதனிடும் இடத்தில் நாய் முதல் கோழி வரைக்கும் மேய்ந்து திரிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை செய்ததில் சுமார் 25,000 கிலோ கிராம் நூடில்ஸ் பிடி பட்டதாகவும் அவற்றில் சேர்க்கப் பட்ட கலவைகள் அனைத்தும் காலவாதியான பொருட்கள் என்றும் தெரிவித்தனர். சோதனையின் போது சுமார் ரூபா 3 மில்லியன் பெறுமதியான நுடில்ஸ் பிடி பட்டதாகவும் .நிறுவனத்தின் உரிமையாளருக்கு வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment